×

தனியார் நிறுவன ஊழியர் மீது கொடூர தாக்குதல்: போலீசார் விசாரணை

 

மதுரை, மே 1: மதுரை, பொன்மேனி, எம்எம் நகரைச் சேர்ந்தவர் தமிழ் அறிவுமணியன் (38). இவர், தனியார் நிறுவனத்தில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, இவர் தனது நண்பர்களான பாலமுருகன், ஜான்ரோஸ் ஆகியோருடன் பை-பாஸ் சாலையில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டு விசேஷத்தில், கலந்து கொண்டார். பின், பை-பாஸ் சாலையில் உள்ள பாரில் நண்பர்களுடன் மது குடிக்க சென்றுள்ளனர். அங்கு, தனது நண்பர்களுடன் தமிழ் அறிவுமணியன் பேசி கொண்டிருந்தார். அப்போது, பார் ஊழியரான விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் வந்து, தமிழ் அறிவுமணியனிடம் பாருக்குள் சத்தம் போடக்கூடாது எனக்கூறியுள்ளார்.

இதில், அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டதில் முனீஸ்வரனும், பாரில் கேசியர் வேலை பார்க்கும் பன்னீர்செல்வம், மற்றொரு ஊழியரான பெத்தானியாபுரம், மேட்டுத் தெருவைச் சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் தமிழ் அறிவுமணியனை தாக்கியதில் அவரின், இடது கால் உடைந்துள்ளது. இது குறித்து தமிழ் அறிவுமணியன் அளித்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் முனீஸ்வரன், பன்னீர்செல்வம் மற்றும் பிரபாகரன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post தனியார் நிறுவன ஊழியர் மீது கொடூர தாக்குதல்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Ponmeni, MM ,Balamurugan ,Johnrose ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...